×

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமினை தர்மபுரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் விண்ணப்பம் பதிவு செய்ய 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், வேளாண் பணிகளில் ஈடுபடும் பெண்கள், மீனவ பெண்கள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில், இத்திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும், இத்திட்டத்துக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தில் பயனாளர்களுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் கடந்த 20ம் தேதி தொடங்கியது.

ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கனை விநியோகம் செய்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 36 ஆயிரம் சிறப்பு முகாம்களில் இந்த திட்டத்தில் விண்ணப்ப பதிவு தொடங்கியது. அந்தவகையில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாமை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். அங்கிருந்த குடும்ப தலைவிகளிடம் உரிமை திட்டம் தொடர்பாக கலந்துரையாடியானார்.குறிப்பாக குடும்ப தலைவிகளிடம் நீங்கள் என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்?, தங்கள் குடும்பம் சூழல் என்ன?.தங்கள் குடும்ப வருமானம் என்ன ?.இந்த திட்டம் எவ்வாறு தங்களுக்கு பயனளிக்கும் என்ற வகையில் உரையாடினார். தொடர்ந்து, குடும்ப தலைவிகளிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று பதிவேற்றம் செய்தார்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : B.C. ,G.K. stalin ,Chennai ,Chief Minister of Justice ,Darmapuri ,Chief Minister ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...