×

கிராவல் மண் கடத்தியவருக்கு வலை: டிராக்டர் பறிமுதல்

 

தேவதானப்பட்டி, ஜூலை 24: தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் கார்த்திக். இவர் வேட்டுவன்குளம் கண்மாய் அருகே உள்ள கரட்டுப்பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் கிராவல் மண் அள்ளி வந்துகொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் ஜெயமங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

எருமலைநாயக்கன்பட்டி மசூதி அருகே வந்தபோது, போலீசாரை பார்த்ததும், டிராக்டரை விட்டு விட்டு கார்த்திக் தப்பியோடி விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிந்த ஜெயமங்கலம் போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

The post கிராவல் மண் கடத்தியவருக்கு வலை: டிராக்டர் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Karthik ,Karuppaswamy ,Erumalainayakanpatti ,Vedtuvankulam Kanmai ,
× RELATED கோயில் செயல் அலுவலரை தாக்கியவர் மீது வழக்கு