×

ஆண் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு

 

வால்பாறை, ஜூலை 24: வால்பாறை அடுத்துள்ள அப்பர் ஆழியார் அணை கரையோரம் நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காலில் அடிபட்ட சிறுத்தை ஒன்று உயிரிழந்தது கிடந்தது தெரியவந்தது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறை மருத்துவ குழுவினர் சிறுத்தையை உடற்கூறு ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆண் சிறுத்தை என்றும், சுமார் 6 முதல் 7 வயது இருக்கும் எனவும், சிறுத்தையின் இடது பின்னங்கால் காலில் அடிபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆய்வக பரிசோதனைக்கு பின்னர் சிறுத்தை உயிர் இழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அதே இடத்தில் சிறுத்தை பல் மற்றும் நகம் உள்ளதை உறுதி செய்து சிறுத்தையின் உடலை அங்கே தீ முட்டி எரியூட்டப்பட்டது.

The post ஆண் சிறுத்தையின் சடலம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : WALBARA ,Upper Abhiyar Dam ,Walpara ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில்...