×

தேவிபட்டணத்தில் மது விற்றவர் கைது

சிவகிரி, ஜூலை 23: தேவிபட்டணத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சிவகிரி அருகே தேவிபட்டணம் ராமசாமியாபுரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிவகிரி சப்இன்ஸ்பெக்டர் சஜூவ் மற்றும் போலீசார் ராமசாமியாபுரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் காளிராஜ் (a45) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள், ரூ.5460 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தேவிபட்டணத்தில் மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Devipatnam ,Sivagiri ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில்...