×

மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் 30 நாட்கள் வரை நடக்கிறது சேத்துப்பட்டில் நாளை முதல்

சேத்துப்பட்டு, ஜூலை 23: சேத்துப்பட்டில் நாளை முதல் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து சேத்துப்பட்டு மின் பகிர்மான செயற்பொறியாளர் ரவிச்சந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் வருகின்ற 24ம் தேதி முதல் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி திருவண்ணாமலை மின் பகிர்வான வட்டம் சேத்துப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பிரிவு அலுவலங்களிலும் வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் பெற்றிருக்கும் பொது மின் இணைப்பு ஆகியவற்றிற்கான பெயர் மாற்றுவதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு கிரயம் பெற்ற உரிய விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு கிரையப்பத்திரம் அல்லது நடப்பு தேதி வரி ரசீது பாகப்பிரிவினை பத்திரம் அல்லது நீதிமன்ற ஆணை மேலும் இறந்தவர்களின் பெயர்களில் உள்ள மின் இணைப்பினை பெயர் மாற்றம் செய்ய உரிய விண்ணப்பத்துடன் ஆதார் கார்டு, வாரிசு சான்று, நடப்பு தேதி வரை வரி ரசீது இடத்தின் உரிமை சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும்.
அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது மின் இணைப்புகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் பெயரில் பெயர் மாற்றம் செய்ய உரிய ஆவணங்களுடன் இணையதளம் மூலமாகவோ அல்லது பிரிவு அலுவலகத்திலோ நேரில் சமர்ப்பித்து பெயர் மாற்றத்திற்கு உரிய கட்டணம் செலுத்தி அன்றே பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு மூலம் 24 ஆம் தேதியிலிருந்து 30 நாட்கள் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் 30 நாட்கள் வரை நடக்கிறது சேத்துப்பட்டில் நாளை முதல் appeared first on Dinakaran.

Tags : Sethupat ,Dinakaran ,
× RELATED நாதக நிர்வாகி கடை உட்பட 2...