×

பழைய வண்ணாரப்பேட்டை நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!

சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் தியாகராய கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னையில் சமீபகாலமாக கல்லூரி மாணவர்கள் செய்யும் அட்டகாசம் அதிகரித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோதலில் ஈடுபடுவது; கத்தி, அரிவாளை எடுத்துக் கொண்டு மற்ற கல்லூரி மாணவர்களை துரத்துவது போன்ற சம்பவங்கள் அதிகம்.

பொது இடங்களில் சண்டை போடுவது, என கல்லூரி மாணவர்களின் சேட்டை மீண்டும் அதிகரித்துள்ளது. அப்படியொரு சம்பவம்தான் நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் வள்ளலார் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தின் கூரை மீது ஏறி தியாகராய கல்லூரிக்கு ஜே, தியாகராய புலிங்கோ ஜே என முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பழைய வண்ணாரப்பேட்டை நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : paranarapet highway ,Chennai ,Sacrifice College ,Thiruvettiyur Highway, ,Old Vaanarapet ,Old Paranapet Highway College ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...