×

ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில்

டெல்லி: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைப்பதற்கு 2018-19ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு திட்டத்தொகையாக ரூ.208.3 கோடி செலவாகும் என ஒன்றிய அரசு கணக்கிட்டது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில், 221 கிலோமீட்டர் தொலைவு நீளமுள்ள ரயில் பாதைகளை பல்வேறு ரயில் வழித்தடங்களுடன் இணைக்கும் வகையில் பல்வேறு பணிகளை ரயில்வே அமைச்சகம் தமிழ்நாட்டில் செயல்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி அகிலேஷ் பிரசாத் சிங் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைப்பதற்கு ஆண்டு வாரியாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் தெரிவித்துள்ளார். அதில் தமிழ்நாடு அரசு 2023 ஏப்ரல் 21-ம் தேதி ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக ராமேஸ்வரம் – தனுஷ்கோடி பகுதிகள் உள்ளதால், ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரையிலான ரயில் திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு எழுத்து பூர்வ பதில் அளித்துள்ளார்.

The post ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் திட்டத்தை கைவிட தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Rameswaram ,Railway Minister ,Ashwini Vaishnav ,Delhi ,Union Government ,Danushkodi ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...