×

வராக மூர்த்தி பூமிதேவி கோவிலில் நாராயணீய பாராயணம்

 

பாலக்காடு, ஜூலை 22: பாலக்காடு திருத்தாலா அருகே ஆனக்கரை பணியூர் வராகமூர்த்தி பூமிதேவி கோவில் ராமாயண மாதத்தையொட்டி பணியூர் கோவில் நாராயணீயம் குழுவினர் தலைமையில் நாராயணீய பாராயணம் நடைபெற்றது. லீலா விஸ்வநாதன், பினிசுரேந்திரன், ஜிஜா ஹரிநந்தன், ஷர்மிளா தினேஷன், வாசந்தி ஆகியோர் தலைமையில் நாராயணீய பாராயணம் நடந்தது.

ராமாயண மாதத்தை முன்னிட்டு ஜூலை 23ம் தேதி இல்லம் நிறையும், ஆகஸ்ட் 15ம் தேதி அஷ்டதிரவ்ய மகாகணபதி ஹோமம், கஜபூஜை, யானை ஊட்டு ஆகியவை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கவனித்து வருகின்றனர். ஆடி மாதம் முழுவதும் பணியூர் வராகமூர்த்தி பூமிதேவி கோவில் நாராயணீய பாராயணம் நடைபெறும். ஆடிமாதம் என்பதால் பணியூர் வராகமூர்த்தி பூதிதேவி கோவிலுக்கு பக்தர்கள் வருகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

The post வராக மூர்த்தி பூமிதேவி கோவிலில் நாராயணீய பாராயணம் appeared first on Dinakaran.

Tags : Narayaniya Parayanam ,Varaha Murthy Bhumi Devi Temple ,Palakkad ,Anakarai Panyur ,Varahamurthy ,Bhumi Devi temple ,Palakkad Tiruthala Panyyur ,Ramayana ,Varaha ,Murthy Bhumi Devi ,Temple ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...