×

லாரி பட்டறையில் டயரை திருடியதொழிலாளி கைது

கிருஷ்ணகிரி, ஜூலை 22: கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (32). இவர் கிருஷ்ணகிரி-குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டிநாயனப்பள்ளி அருகே லாரி பட்டறை வைத்துள்ளார். கடந்த 15ம் தேதி இரவு, வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்தபோது கடையின் வெளியே வைக்கப்பட்டிருந்த டயர்களில், ஒரு டயரை மர்மநபர் திருடிச்சென்றிருப்பது தெரிந்தது. அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, தொன்னையன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த நல்லரசு(37) என்பவர் டயரை திருடிச்சென்றது தெரிந்தது. இதுகுறித்து மகாராஜகடை போலீசில் அவர் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் நல்லரசை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

The post லாரி பட்டறையில் டயரை திருடியதொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Sivalingam ,Krishnagiri Kattanayanapalli ,Krishnagiri-Kuppam National Highway ,Katinayanapalli ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு