குவாலியர்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாற்றத்திற்கான அலை வீசி வருவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 40 நாட்களில் இரண்டாவது முறையாக நேற்று மாநிலத்துக்கு வருகை தந்த காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, சுதந்திர போராட்ட வீரர் ராணி லட்சுமிபாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து குவாலியரில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட பிரியாங்கா, ‘‘மணிப்பூர் மாநிலம் தீப்பற்றி எரிகிறது.
77 நாட்களுக்கு பின் பெண்களுக்கு எதிரான அட்டூழியம் குறித்த வீடியோ வெளிவந்த பின்னர் பிரதமர் மோடி பேசுகிறார். அப்போதும் அவர் அந்த பிரச்னையை அவர் அரசியலாக்கினார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயரை குறிப்பிட்டு குற்றஞ்சாட்டினார். நாட்டில் நடக்கும் ஒப்பந்தங்களால் இரண்டு தொழிலதிபர்கள் மட்டுமே பயன்பெறுகின்றனர். ஒருவர் நாள் ஒன்றுக்கு ரூ.1600 கோடி சம்பாதிக்கும் வேளையில் விவசாயிகள் 27 ரூபாயை கூட கிடைக்காமல் வாழ்க்கையை நடத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம், 100 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1500 உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படும்” என்றார்.
The post ம.பி.யில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: பிரியங்கா கருத்து appeared first on Dinakaran.