×

பழவந்தாங்கலில் சோகம் கல்குவாரி குட்டையில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை

ஆலந்தூர்: ஆலந்தூர் குபேர முனுசாமி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் வேதிகா (15), நங்கநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 17ம் தேதி வழக்கம் போல தனது சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பழவந்தாங்கல், மடிப்பாக்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் கார்த்திக் புகார் செய்தார். அதில், காலையில் பள்ளிக்கு சென்ற எனது மகள், மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் வேதிகா சென்று வந்த வழிதடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

அப்போது, பழவந்தாங்கல் தலைகனஞ்சேரி பர்மா தமிழர் காலனி கல்லுக்குட்டை அருகே சென்றது பதிவாகியிருந்தது. உடனே போலீசார், நேற்று மாலை அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். வேதிகாவின் புத்தகப்பை கிடந்ததை கண்டுபிடித்தனர். அதனால் கல் குட்டையில் விழுந்து தற்கொலை செய்து செய்தாரா என்ற கோணத்தில் தாம்பரம் தீயணைப்பு மீட்பு படையினருக்கு பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தினேஷ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் வந்ததும் கல்குட்டையில் ரப்பர் படகு மூலம் தேடினர். நேற்றிரவு 10.30 மணியளவில் வேதிகாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பழவந்தாங்கலில் சோகம் கல்குவாரி குட்டையில் குதித்து பள்ளி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Padavangangal ,Kalkuwari ,Alandur ,Karthic ,Alandur Kubera Munusamy Street ,Vedika ,Nanganallur ,
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்