×

சகோதரருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு

 

போடி, ஜூலை 21: போடி சபரிமலை தெருவை சேர்ந்தவர் பரமசிவம்(46). இவர் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது சகோதரர்கள் செல்வராஜ், சக்திமணி, சின்னச்சாமி, சகோதரி சரஸ்வதி ஆகியோர் பரமசிவம் வீட்டிற்கு சென்றனர். பின்னர் நீங்கள் குடியிருப்பது எங்களது வீடு. எனவே உடனடியாக வீட்டை காலி செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் தகாத வார்த்தைகளால் பரமசிவத்தை பேசியதுடன், அவருக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பரமசிவம், இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை செய்ய போடி நகர் போலீசாருக்கு, எஸ்பி உத்தரவிட்டார். இதன்பேரில் செல்வராஜ் உள்ளிட்ட 4 பேர் மீது போடி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சகோதரருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Paramasivam ,Bodi Sabarimala Street ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு