தேவதானப்பட்டி, ஜூலை 21: தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அக்கீம் மகன் தமீம் அன்சாரி(31). இவருக்கும், வடக்கு தெருவைச் சேர்ந்த சேக்சையது(30), இதயதுல்லா(39) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் தமீம் அன்சாரி தனது டூவீலரை மாட்டுகொட்டகையில் நிறுத்திவிட்டு, வீட்டில் தூங்க சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை. பின்னர் விசாரணையில், சேக்சையது, இதயதுல்லா ஆகியோர் முன்விரோதம் காரணமாக டூவீலரை எடுத்து சென்று தீ வைத்தது தெரிந்தது. இதுகுறித்து தமீம்அன்சாரி ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
The post டூவீலரை தீ வைத்து எரித்த 2 பேர் கைது appeared first on Dinakaran.