புதுடெல்லி: பாஜ எம்பி பிரிஜ் பூஷனுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர், பாஜஎம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை, டெல்லி போலீஸ் விசாரித்து வருகிறது. இதில் பிரிஜ் பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு டெல்லி ரோஸ் அவென்யூ கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிரிஜ் பூஷன், மல்யுத்த சம்மேளனத்தின் உதவி செயலாளர் வினோத் தோமர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அதோடு, குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் தனக்கு எதிரான சாட்சிகளையோ, புகார்தாரர்களையோ கலைக்கவோ, மிரட்டவோ முற்படக்கூடாது.நீதிமன்றத்தின் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு பயணம் மேற்கொள்ளக்கூடாது. பிணைத்தொகையாக ரூ. 25 ஆயிரம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார்.
The post பாஜ எம்பி பிரிஜ்பூஷனுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.