×

தண்ணீர் லாரி மோதி அண்ணன் பரிதாப பலி

அம்பத்தூர்: சென்னை அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவநாயகம் (21), இவரது சித்தி மகன் தம்பி வசந்த் (21). இவர்கள் இரவு பைக்கில் அயனம்பாக்கத்தில் இருந்து திருமங்கலம் புறப்பட்டனர். அண்ணாநகர் சாந்தி காலனி பகுதி வழியாக சென்று கொண்டிருந்த போது பின்னால் அதிவேகத்தில் வந்த தண்ணீர் லாரி பைக் மீது மோதியதில் வேதநாயகம் மற்றும் வசந்த் ஆகிய இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, வேதநாயகம் வலது தொடையில் லாரியின் டயர் ஏறி இறங்கியதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து மயங்கினார். இதை பார்த்த தம்பி வசந்த் கதறி அழுதார். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த போது தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வாகன ஓட்டிகள் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வேதநாயகத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே வேதநாயகம் இறந்து விட்டதாக கூறினார். பிறகு அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். லாரியை பறிமுதல் செய்தனர். வியாசர்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்று ஆண்டு படிப்பு முடித்து மேல் படிப்புக்காக ஆசையாக இருந்த மகனின் கனவு நிறைவேறாமல் போனது என தேவநாயகத்தின் பெற்றோர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

The post தண்ணீர் லாரி மோதி அண்ணன் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Devanayakam ,Ayanambakkam ,Ampathur, Chennai ,Vasanth ,
× RELATED அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மாநகர...