×

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விஜயகாந்த கண்டனம்

சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்காடுமை செய்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கின்றன. இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கதக்கது. இது மனிதாபிமானமற்ற செயல். மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே கடந்த சில நாட்களாக வன்முறை நீடித்து வரும் நிலையில், அதனை தடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.

கலவரத்தால் பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், தற்போது இரண்டு பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. உலக நாடுகளை சுற்றி வரும் பிரதமர் மோடி, நமது நாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தின் துணையாடு மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். மணிப்பூர் மக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்காடுமை செய்த கொடூர குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே ஏற்பட்ட களங்கம். பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியால் வன்முறை சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து விஜயகாந்த கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Vijayaganth ,Manipur ,Chennai ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...