×

மகாராஷ்டிராவில் கடும் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..மக்கள் தவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், அரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பலத்த மழை கொட்டுகிறது.

இதனால், பல இடங்களில் வாகனங்கள் நடுவழியில் சிக்கி தவித்தன. ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் தவித்து வந்தனர். அவர்களை மீட்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டம் இர்சால்வாடி கிராமத்தில் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 25 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். 21 மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 30 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. கனமழை காரணமாக இர்சல்வாடி கிராமத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிரா நிலச்சரிவு பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் மீட்புப்பணி தீவிரமடைந்துள்ளது.

The post மகாராஷ்டிராவில் கடும் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு..மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Mumbai ,Raigad district ,North India ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...