×

திருத்தணியில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகம்

திருத்தணி: தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழி, ரேஷன் கடை ஊழியர்களிடம் வழங்கினார். இதன்பின்னர் அதிகாரி மலர்விழி கூறியதாவது; மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் போதிய அளவுக்கு கையிருப்பு உள்ளது. இந்த திட்டத்தில் தகுதியுடையவர்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். யாரும் பதற்றமடைய தேவையில்லை. இன்று முதல் நியாய விலை கடை பணியாளர்கள் ஒவ்வொரு நியாய விலைக் கடை பகுதியில் முகாம்கள் அமைத்து நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை நேரடியாக சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு வழங்குவார்கள்.இவ்வாறு தெரிவித்தார்.

The post திருத்தணியில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Tamil ,Nadu ,Malarvizhi ,Ration Shop ,Dinakaran ,
× RELATED மனித முகம் போன்ற அரிய வகை ஆந்தை பிடிபட்டது