சாயல்குடி, ஜூலை 20: சாயல்குடியில் திருவிழாவிற்கு அனுப்பாத விரக்தியில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மாணிக்க நகர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் மகன் காளிதாசன்(15). 10ம் வகுப்பில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி சாயல்குடி அருகே கொண்டுநல்லான்பட்டியில் திருவிழா நடந்துள்ளது. இந்த விழாவிற்கு வரும்படி காளிதாசனை அவரது மாமா அழைத்துள்ளார். ஆனால் பெற்றோர் அனுமதிக்க வில்லை என்று கூறப்படுகிறது.இதனால் காளிதாசனிடம் அவரது மாமா கோபமடைந்தார். இதனால் விரக்தியடைந்து நேற்று முன்தினம் காளிதாசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். சாயல்குடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post திருவிழாவிற்கு அனுப்பாததால் சிறுவன் தற்கொலை appeared first on Dinakaran.