×

ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காளைகள்

 

இளம்பிள்ளை, ஜூலை 20: சித்தர் ேகாயில் அடிவாரத்தில், இன்று எருதாட்டம் நடக்க உள்ள நிலையில், நேற்று காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்தனர். சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டியில் அமைந்துள்ள மூங்கில்குத்து முனியப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, இன்று(19ம் தேதி) மாலை 3 மணி அளவில் எருதாட்டம் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நேற்று தர்மபுரி, பென்னாகரம், மாரண்டஹள்ளி, நல்லம்பள்ளி, மல்லாபுரம், கல்லாவி, ஏற்காடு அடிவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 18 கோர்வை கொண்ட ஒரு கோர்வைக்கு 5 காளைகள் வீதம் 90 காளைகள் இடங்கணசாலை, காடையாம்பட்டி பகுதியில் இருந்து சிறப்பு பூஜை செய்து அங்கிருந்து கஞ்சமலை சித்தர் கோயில் அடிவார பகுதியிலிருந்து நெய்க்காரப்பட்டி மூங்கில் குத்து முனியப்பன் கோயில் வந்தடைந்தன. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் காளைகளை பிடித்து வரிசையாக வந்தனர். இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

The post ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட காளைகள் appeared first on Dinakaran.

Tags : Yumupillai ,Siddar Yegai ,Bulls ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் கோளாறால் வீட்டு வரி ரசீது தாமதம்