×

லாரி மோதி தொழிலாளி பலி

ஓசூர், ஜூலை 20: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜூ தண்டி (40). இவர் ஓசூரில் உள்ள பெலத்தூர் வ.உ.சி. நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 16ம் தேதி மாலை, இவரும் பெலத்தூரை சேர்ந்த பியத்நாத்(26) என்பவரும் டூவீலரில் ஓசூர்-பாகலூர் சாலையில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி இவர்களது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜூ தண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பியத்நாத்துக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்து வந்த பாகலூர் போலீசார், ராஜூ தண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பியத்நாத்தை, ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Raju Thandi ,Assam ,Belathur V.U.C ,Hosur ,Dinakaran ,
× RELATED அசாமில் கணினி பயிற்சி மைய கட்டடத்தில் பயங்கர தீ விபத்து