கன்னியாகுமரி, ஜூலை 20 : கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, நெல்லை நில மோசடி தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் கும்பகோணம் டி.எஸ்.பி.யாக இருந்த மகேஷ்குமார், கன்னியாகுமரி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று கன்னியாகுமரி டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் டி.எஸ்.பி. ராஜா பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் புதிய டி.எஸ்.பி. மகேஷ்குமார், எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத்தை சந்தித்து பேசினார்.
The post கன்னியாகுமரி டி.எஸ்.பி. மாற்றம் appeared first on Dinakaran.