×

சாய் சுதர்சன் அபார சதம்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

கொழும்பு: ஏசிசி எமர்ஜிங் கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் ஏ அணியுடன் நேற்று மோதிய இந்தியா ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் ஏ அணி 48 ஓவரில் 205 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. காசிம் அக்ரம் 48, சாகிப்ஸதா 35, முபாசிர் 28, மெஹ்ரான் 25* ரன் எடுத்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 5, மானவ் சுதர் 3, பராக், நிஷாந்த் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 36.4 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 210 ரன் எடுத்து வென்றது.

அபிஷேக் 20, நிகின் ஜோஸ் 53 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சாய் சுதர்சன் 104 ரன் (110 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் யஷ் துல் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சாய் சுதர்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பி பிரிவில் இந்தியா ஏ அணி ஹாட்ரிக் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. பாகிஸ்தான் ஏ (4 புள்ளி) 2வது இடம் பிடித்தது. நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டங்களில் இலங்கை ஏ – பாகிஸ்தான் ஏ, வங்கதேசம் ஏ – இந்தியா ஏ அணிகள் மோதுகின்றன.

The post சாய் சுதர்சன் அபார சதம்; பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.

Tags : Sai Sudarsan ,India ,Pakistan ,Colombo ,ACC Emerging Cup ODI series ,Pakistan A ,Dinakaran ,
× RELATED அதிகம் எல்லாம் அதிகம் (சென்னை-பஞ்சாப் ஆட்டம் வரை)