×

திருடிய களைப்பில் வாலிபர்கள் குறட்டை கொத்தாக தூக்கிய மக்கள்

வேதாரண்யம்: பைக்கை திருடிய களைப்பில் தூங்கிய திருடர்களை மக்கள் கொத்தாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வாய்மேடு பகுதியில் ஒரு பெட்ரோல் நிலையம் பின்புறம் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மதுபோதையில் 4 பேர் பைக்குகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். சந்தேகத்துக்கிடமாக தூங்கி கொண்டிருந்த 4 பேரையும் அப்பகுதியினர் ரவுண்டு கட்டி விசாரித்ததில், 4 பேரும் பைக் திருடர்கள் என்பதும், பைக்கை திருடி வந்த களைப்பில் அசந்து தூங்கி கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் நன்கு ‘கவனித்து’ அருகில் உள்ள வாய்மேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர், நாகை மாவட்டத்தை சாந்தகுமார் (19), பாலமுரளி (19), வினோத் (22), அறிவழகன் (19) மற்றும் இரு சிறுவர்கள் ஆகிய 6 பேரும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து, அவர்களிடம் 5 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post திருடிய களைப்பில் வாலிபர்கள் குறட்டை கொத்தாக தூக்கிய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam taluka ,Nagapattinam district ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்