×

தாம்பரம் அருகே இரும்புலியூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக நிர்வாகி கைது..!!

தாம்பரம்: தாம்பரம் அருகே இரும்புலியூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியை சேர்ந்தவர் ஷீபா. இவர் கடத்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்பப் பிரச்சனை காரணமாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெண் சென்றுள்ளார். அப்போது வேறு ஒரு பிரச்சனைக்காக தாம்பரம் காவல் நிலையம் சென்ற தாம்பரம் 53-வது வட்ட அதிமுக செயலாளர் குமாரன் என்பவர் பெண்ணின் பிரச்சனை சம்பந்தமாக உதவுவதாக கூறி அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்றுள்ளார். செல்போனில் தொடர்புகொண்ட குமரன் தொடர்ந்து ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அந்த பெண் தனது கணவர் மூலமாக தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அதிமுக நிர்வாகி குமாரனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அவரது செல்போனை பறிமுதல் செய்ததில் அவர் பாலியல் தொல்லை கொடுத்தது நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவரை போக்சோ சட்ட உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு புழல் சிறையில் குமரன் அடைக்கப்பட்டார்.

The post தாம்பரம் அருகே இரும்புலியூரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் அதிமுக நிர்வாகி கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chief Executive ,Irampuliore ,Thambaram ,TAMBARI ,Irumbuliore ,Irumbuliur ,
× RELATED இந்தியன் வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான...