×

உடுமலை அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து

 

உடுமலை, ஜூலை 19: உடுமலையை அடுத்த நரசிங்காபுரத்தில் கன்னிமுத்து என்பவருக்கு சொந்தமான தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உடுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தேங்காய் மட்டைகள், தென்னை நார், எந்திரங்கள் மற்றும் டிராக்டர் டிரெய்லர் உட்பட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post உடுமலை அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Udumalai ,Kannimuthu ,Narasingapuram ,Dinakaran ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு