×

வாசுதேவநல்லூரில் பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு

சிவகிரி, ஜூலை 19: வாசுதேவநல்லூரில் பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். வாசுதேவநல்லூர் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் பழனி மகன் தட்சிணாமூர்த்தி (17). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் வாசுதேவநல்லூர் கலைஞர் காலனியை பகுதியை சேர்ந்த சிறுவர்கள் 3 பேருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் தட்சிணாமூர்த்தி நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தட்சிணாமூர்த்தியை வழிமறித்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச்சென்றனர். இதில் படுகாயமடைந்த தட்சிணாமூர்த்தி புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தட்சிணாமூர்த்தியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாசுதேவநல்லூரில் பிளஸ் 2 மாணவனுக்கு அரிவாள் வெட்டு appeared first on Dinakaran.

Tags : Scythe ,Vasudevanallur ,Sivagiri ,Dinakaran ,
× RELATED வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி...