×

வாலிபரை தாக்கியவர் கைது

கயத்தாறு, ஜூலை 19: கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி மேலத்தெருவை சேர்ந்த முத்துமாலை மகன் ரவி (32). இவருக்கும், இதே தெருவைச் சேர்ந்த கடற்கரை மகன் சுடலைமணி (30) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக அவ்வப்போது தகராறு நடந்துவந்தது‌. நேற்று சுடலைமணி, ரவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டதோடு கல்லாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த ரவி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கயத்தாறு போலீசார் சுடலைமணியை கைதுசெய்தனர்.

The post வாலிபரை தாக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Gayatharu ,Ravi ,Muthumalai ,Rajaputukudi Meletheru ,
× RELATED கயத்தாறு அருகே துணிகரம் வீட்டை உடைத்து 65 பவுன் நகை, 1.5 லட்சம் பணம் கொள்ளை