×

நாளை மறுநாள் பார்லி. கூட்டத் தொடர் தொடங்குகிறது: இன்றிரவு மாநிலங்களவை கட்சி தலைவர்களுடன் ஆலோசனை: ராஜ்யசபா தலைவர் அழைப்பு

புதுடெல்லி: நாளை மறுநாள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கும் நிலையில், இன்றிரவு மாநிலங்களவை கட்சி தலைவர்களுடனான ராஜ்யசபா தலைவரின் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் (ஜூலை 20) தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 23 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத் ெதாடரில் மொத்தம் 17 அமர்வுகள் நடைபெறும். நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரானது, பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுவதால் அந்த தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதற்காக ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்றிரவு டெல்லியிலும், எதிர்கட்சிகள் சார்பிலான கூட்டம் நேற்று பெங்களூருவில் ெதாடங்கிய நிலையில், இன்று மாலை தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜகதீப் தன்கர் விடுத்துள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக மாநிலங்களவை கட்சித் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது’ என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இன்று மாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமான முறையில் நடத்துவது குறித்து ஆளுங்கட்சி, எதிர்கட்சி மாநிலங்களவை தலைவர்களுடன் ராஜ்யசபா தலைவருமான ஜகதீப் தன்கர் ஆலோசனை நடத்துவார்.

The post நாளை மறுநாள் பார்லி. கூட்டத் தொடர் தொடங்குகிறது: இன்றிரவு மாநிலங்களவை கட்சி தலைவர்களுடன் ஆலோசனை: ராஜ்யசபா தலைவர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Barley ,Rajya Sabha ,New Delhi ,Monsoon Session ,Parliament ,Dinakaran ,
× RELATED மாநிலங்களவை உறுப்பினர்கள் 3 பேர் பதவி ஏற்பு