×

திம்மாவரம் ஊராட்சியில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்ட பூமிபூஜை: எம்எல்ஏ பங்கேற்பு

செங்கல்பட்டு: திம்மாவரம் ஊராட்சியில், ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில் செங்கல்பட்டு எம்எல்ஏ மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டிற்காக செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கடந்த 15ம் தேதி திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து, திம்மாவரம் ஊராட்சி 4வது வார்டுக்குட்பட்ட படவேட்டம்மன் நகர் பகுதியில் வசிக்கும் 21 பழங்குடி இன குடும்பங்களுக்கு பழங்குடி இன மக்கள் நலத்திட்டத்தீன் கீழ் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இதில், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆப்பூர் சந்தானம், ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய கவுன்சிலர் அருள்தேவி, ஊராட்சி மன்ற தலைவர் நீலமேகம் மற்றும் கிளை செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் என பலர் கலந்துகொண்டனர்.

The post திம்மாவரம் ஊராட்சியில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் தொகுப்பு வீடுகள் கட்ட பூமிபூஜை: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Bhumi Puja ,Thimmavaram ,MLA ,Chengalpattu ,Thimmavaram panchayat ,Varalakshumimathusudhanan ,Bhoomi ,Pooja ,Bhoomi Pooja ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...