×

மறைமலைநகரில் கார், ஆட்டோ பயங்கர மோதல்: 3 பேர் படுகாயம்

செங்கல்பட்டு: மறைமலைநகரில், கார், ஆட்டோ மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. மறைமலைநகர் சாமியார் கேட் அருகே வந்தபோது, சாலை சந்திப்பில், திடீரென வந்த ஆட்டோ மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோ சேதமடைந்தது. காரில் இருந்த 2 பேர், ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கிய கார், ஆட்டோ ஆகியவற்றை மீட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். இந்த விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post மறைமலைநகரில் கார், ஆட்டோ பயங்கர மோதல்: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Karamalainagar ,Chengalpattu ,Kiramalai Nagar ,Chengalpat ,Tambaram ,Thiramalaynagar ,Dinakaran ,
× RELATED மறைமலைநகரில் பைக் திருடிய மர்ம நபருக்கு போலீசார் வலை