×

கோயிலில் உண்டியல் வெள்ளிவேல் கொள்ளை

 

சேலம், ஜூலை 18: சேலம் சூரமங்கலம் அருகே புத்துமாரியம்மன் கோயிலில் உண்டியல், வெள்ளி வேலை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் சூரமங்கலம் பழையூர் பூனைகரடு பகுதியில் புத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஏராளாமானோர் வந்து வழிபட்டு செல்கின்றனர். கடந்த 15ம் தேதி இரவு கோயிலில் பூஜையை முடித்து இரவு, கோயிலை பூசாரி பூட்டிச் சென்றார், நேற்று முன்தினம் கோயிலுக்கு பூசாரி வந்து பார்த்த போது, கோயில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது, மர்மநபர்கள் கோயில் உண்டியல், வெள்ளி வேலை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி உள்ள கைரேகைகளை சேகரித்துனர். அப்பகுதியில் உள்ள சிசிவடி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post கோயிலில் உண்டியல் வெள்ளிவேல் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Salem ,Puthumariamman ,Suramangalam ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...