- தமிழ்
- தமிழ்நாடு
- குஜராத்
- புது தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நிதி ஆயோக்
- மகாராஷ்டிரா
- குஜராத். ...
- தின மலர்
புதுடெல்லி: நிதி ஆயோக்கின் ஏற்றுமதித் தயார்நிலைக் குறியீடு 2022ல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. நிதிஆயோக்கின் ஏற்றுமதி தயார் நிலை குறியீடு மாநிலங்களின் ஏற்றுமதி திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்தின் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த இரண்டு தரவரிசையிலும் குஜராத் முதலிடத்தைப் பிடித்திருந்தது.
மூன்றாவது பதிப்பான தரவரிசையில் தமிழ்நாடு 80.89 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. மகாராஷ்டிரா 78.20 மதிப்பெண்களுடன் இரண்டாமிடத்திலும், கர்நாடகா (76.36) மூன்றாவது இடத்திலும் உள்ளன. குஜராத் 73.22 மதிப்பெண்களுடன் நான்காவது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 5வது ஒடிசா 6வது, மேற்கு வங்கம் 7வது மற்றும் கேரளா 8வது இடத்தையும் பிடித்துள்ளன.
The post ஏற்றுமதி செயல்திறன் தமிழ்நாடு முதலிடம்: 4வது இடத்திற்கு சென்றது குஜராத் appeared first on Dinakaran.