×

ஏரியில் விழுந்த மகனை காப்பாற்றிய தந்தை வலையில் சிக்கி பலி

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த புன்னப்பாடியை சேர்ந்தவர் ரஞ்சித்(35), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சுகன்யா. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் ரஞ்சித் அங்குள்ள ஏரியில் மகன் விஷ்ணு பிரியனுடன்(9) மீன்பிடிக்க சென்றார். அப்போது ஏரியில் மகன் தவறி விழுந்தான். உடனே ரஞ்சித் ஏரியில் குதித்து மகனை காப்பாற்றினார். அப்போது அவரது காலில் மீன் வலை சிக்கியதில் நீரில் மூழ்கி பலியானார். ஆற்காடு தாலுகா போலீசார் வந்து ரஞ்சித்தின் சடலத்தை மீட்டனர். ஏரியில் தவறி விழுந்த மகனை காப்பாற்றிவிட்டு தந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post ஏரியில் விழுந்த மகனை காப்பாற்றிய தந்தை வலையில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Artgad ,Ranjith ,Punnappadi ,Artgad, Ranipet district ,Sukanya ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கு பின்னணி பாடகர் வேல்முருகன் கைது