×

பொன்னமராவதி அருகே 7 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தார் சாலை: சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே 7 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒளியமங்கள ஊராட்சியில் உள்ள சுந்தம்பட்டி கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை அடுத்த ஒரு சில ஆண்டுகளிலேயே சிதிலமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சிதிலமடைந்த நிலையில் இருக்கும் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மருத்துவ அவசரத்திற்கு கூட உரிய நேரத்தில் செல்ல முடியாததால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கும் கிராம மக்கள் தார் சாலையை சீரமைத்து தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சாலையை சீரமைத்து தரக்கோரி ஆதார் உள்ளிட்ட அரசு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

The post பொன்னமராவதி அருகே 7 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தார் சாலை: சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tar road ,Ponnamaravati ,Pudukkottai ,Pudukkottai district ,Ponnamaravathi ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து...