×

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குதூகலம்

தென்காசி, குற்றாலத்தில் நேற்று மதியம் வரை வெயில் அடித்த போதும் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் விழுந்தது. குற்றாலத்தில் தொடர்ந்து 3 தினங்களாக வெயில் அடித்து வந்தது. நேற்று மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. மதியத்திற்கு பிறகு சற்று இதமான சூழல் நிலவியது. வெயிலடித்த போதும் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் விழுந்தது.
 
மெயினருவியில் ஆண்கள் பகுதியில் நன்றாகவும் பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது. பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவிகளில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

Tags : Tourist attractions ,waterfalls ,Courtallam ,
× RELATED சுருளி அருவியில் குறைந்த நீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்