×

அஞ்சல் துறை காப்பீடு புதுப்பிக்க சலுகை

 

மதுரை, ஜூலை 17: அஞ்சல் துறையில் காலாவதியான காப்பீட்டு பாலிசிகளை சலுகையுடன் புதுப்பித்துக்கொள்வது குறித்து மதுரை கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் கல்யாண வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அஞ்சல் துறையில் குறைந்த ப்ரீமியம், அதிக போனசுவுடன் கூடிய ஆயுள் காப்பீடு பாலிசி சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு சூழல் காரணமாக வாடிக்கையாளர்கள் தங்களது ப்ரீமியம் தொகையை செலுத்த தவறி விடுவதால் பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன.

இவற்றை புதுப்பிக்க புதிய சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காலாவதி பாலிசிகளை புதுப்பிக்க அபராத தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை, அதாவது அதிகபட்சம் ரூ.2500 முதல் ரூ.3500 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சலுகையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்ெகாண்டு, தங்களது பாலிசிகளை புதுப்பித்து பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அஞ்சல் துறை காப்பீடு புதுப்பிக்க சலுகை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Divisional Post ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை