×

சிற்றாறு ரப்பர்கழக மருத்துவமனை அருகே வீடு புகுந்து நாயை கவ்விச்சென்ற புலி: மீண்டும் அட்டகாசம்

அருமனை: குமரி மாவட்டம் சிற்றாறு அரசு ரப்பர் கழக மருத்துவமனை அருகே குடியிருப்பில் புகுந்து நாயை கவ்வி சென்ற புலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டம் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் புலி ஒன்று அடிக்கடி குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 8ம்தேதி ஆட்டை கடித்து கொன்றது. சமீபத்தில் பசுமாடு ஒன்றையும் தாக்கியது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் பேச்சிப்பாறை அடுத்த மூக்கறைக்கல் பகுதியில் சுந்தரி என்பவரது வீட்டின் அருகே ஆட்டுக்கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்றது. சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் அரசு ரப்பர் கழக மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு 15 வருடமாக நர்சாக வேலைபார்த்து வருபவர் ஜோதி ஷோரி. இவர் தனது கணவர் மதியழகன் (52) மற்றும் குடும்பத்தினருடன் மருத்துவமனை அருகே நர்சுகள் மற்றும் டாக்டர்கள் தங்குவதற்கான குடியிருப்பில் தங்கியுள்ளார்.இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று முன் தினம் இரவில் நாய் வீட்டின் வெளியே படுத்துக்கொண்டிருந்தது.

திடீரென்று நள்ளிரவு 1 மணியளவில் நாயின் கதறல் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதி ஷோரி விட்டின் கதவை திறந்து வெளியே பார்த்தார்.அப்போது நாயை காணவில்லை. அந்த நாயை புலி இழுத்து சென்றதற்கான தடயம் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதி ஷோரி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் அங்கு ஆய்வு செய்தனர்.புலி நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்கனவே அங்கு பல இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதன் பதிவுகளை வனத்துறையினர் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

The post சிற்றாறு ரப்பர்கழக மருத்துவமனை அருகே வீடு புகுந்து நாயை கவ்விச்சென்ற புலி: மீண்டும் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Tiger ,Rabaragasa Hospital ,Atakasam ,Kumari District ,Cricket Government Rubber Club Hospital ,Toggy ,Rabha Hospital ,Atacasam ,Dinakaran ,
× RELATED முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு...