×

சத்துணவில் பல்லி; அமைப்பாளர் சமையலர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த தண்டரை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை தனித்தனியே செயல்படுகிறது. இங்கு நேற்று வழங்கப்பட்ட சத்துணவில் கூடுதலாக சர்க்கரை பொங்கல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஒரு மாணவி சாப்பிட்டுக்கொண்டிருந்த சர்க்கரை பொங்கலில் பல்லி இறந்து கிடந்துள்ளது.

இந்த உணவை சாப்பிட்டு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்த 61 மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்ததும், படிப்படியாக மாணவர்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், சத்துணவு சமைப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக சத்துணவு அமைப்பாளர் சியாமளா மற்றும் சமையலர் மஞ்சுளா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

The post சத்துணவில் பல்லி; அமைப்பாளர் சமையலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Sathunavil Lizard ,Thiruvannamalai ,Panchayat Union Primary School ,Government High School ,Thandarai village ,Sathunavil Palli ,
× RELATED குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து