×

கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

கரூர்: கரூர் ஆண்டான்கோவில் அருகே என்.புதூரில் கிணற்றில் குளித்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிறுவர்கள் அஸ்வின் (12), மாரிமுத்து (13), விஷ்ணு (13) ஆகியோர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று மாலை விளையாடச் சென்றவர்கள் வீடு திரும்பாததால், பல இடங்களில் பெற்றோர்கள் தேடி வந்தனர். நண்பர்களிடம் விசாரித்தபோது 3 பேரும், கிணற்றில் குளிக்க சென்றது தெரிய வந்தது. 3 பேரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post கரூர் அருகே கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Karur ,Karur Antanko ,Putur ,Aswin ,Marimuthu ,Vishnu ,Dinakaran ,
× RELATED முன்னாள் படை வீரர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு