×

அமாவாசையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் மல்லி கிலோ ரூ.500

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், முல்லை, ஜாதிமல்லி, ஐஸ் மல்லி ரூ.360க்கும் கனகாம்பரம் ரூ.300க்கும், விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘‘அமாவாசையை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முகூர்த்த நாள், விசேஷ நாட்கள் முடிந்த பிறகு மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறையும்’’ என்றார்.

The post அமாவாசையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் மல்லி கிலோ ரூ.500 appeared first on Dinakaran.

Tags : Chennai ,Coimbed ,Coimbade Market ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...