![]()
ராமேஸ்வரம்: இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து 3 சிறுவர்கள் உட்பட 8 பேர், அகதிகளாக நேற்றிரவு ராமேஸ்வரம் வந்தனர். இலங்கையில் இருந்து இரண்டு குடும்பத்தினர் படகு மூலம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் ராமேஸ்வரத்தில் உள்ள கோதண்டராமர் கோயில் கடற்கரை பகுதிக்கு வந்து இறங்கினர். இவர்களை இறக்கிவிட்ட அந்த நாட்டு படகு திரும்பச் சென்றுவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் போலீசார் 8 பேரையும், ராமேஸ்வரம் கடற்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கை யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (50), மனைவி தர்சிகா (34), இவர்களது குழந்தைகள் அஸ்னாத் (15), யோவா காஷ் (11) மற்றும் மரியா (35), இவரது மகன்கள் அபினாஷ் (16), யக்ஷிதன் (8) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும், படகு கட்டணமாக ரூ.3 லட்சம் கொடுத்து இலங்கை மன்னார் பேசாளை கடற்கரையில் இருந்து நேற்றிரவு 9.30 மணியளவில் படகில் புறப்பட்டு, ராமேஸ்வரத்திற்கு வந்ததும் தெரிய வந்தது. மரைன் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப்பின் இவர்கள் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.
The post இலங்கையிலிருந்து 8 பேர் அகதிகளாக வருகை appeared first on Dinakaran.
