![]()
டெல்லி: யமுனை ஆற்றின் நீர்மட்டம் படிப்படியாக சீராக குறைந்து வருகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் கனமழை இல்லையென்றால் விரைவில் டெல்லியில் இயல்பு நிலை திரும்பும். குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணி தொடங்கியுள்ளது. சந்திரவால், வசிராபாத் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் இயக்கம் நாளைமுதல் தொடங்கும் என்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.
The post யமுனை ஆற்றின் நீர்மட்டம் படிப்படியாக சீராக குறைந்து வருகிறது: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் appeared first on Dinakaran.

