×

காய்கறி விலை அதிகரித்து வரும் நிலையில் மீன்கள் விற்பனை அதிகரிப்பு: திரேஸ்புரம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை அமோகம்

தூத்துக்குடி: காய்கறி விலை உயர்ந்து வரும் நிலையில் மீன்கள் விலை குறைவாக உள்ளதால் தூத்துக்குடி திரேஸ்புரம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை அமோகமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதை குறைத்துள்ளனர். அதே வேளையில் மீன்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். வழக்கத்தை விட மீன்களின் விலை குறைவாக உள்ளது. விலை மீன் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஊழி மீன் ரூ.300-க்கும், பாறை மீன் ரூ.250-க்கும், சாலை மீன் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

The post காய்கறி விலை அதிகரித்து வரும் நிலையில் மீன்கள் விற்பனை அதிகரிப்பு: திரேஸ்புரம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Threspuram port ,Thoothukudi ,
× RELATED சைக்கிள் மீது மினிபஸ் மோதி தொழிலாளி பலி