×

பந்தலூர் பகுதியில் திடீர் மின் துண்டிப்பால் பாதிப்பு

 

பந்தலூர், ஜூலை 15: பந்தலூர் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் அசரப் மற்றும் நிர்வாகிகள் குன்னூர் மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பந்தலூர் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பால் வங்கி சேவைகள், அரசு அலுவலக சேவைகள், இ-சேவை மைய பணிகள், பண பரிவர்த்தனைகள், உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் முடங்கிறது.அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியபோக்கே இதற்கு காரணமாக உள்ளது. எனவே உரிய ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறும் பட்சத்தில் வியாபாரிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

The post பந்தலூர் பகுதியில் திடீர் மின் துண்டிப்பால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Bandalur ,Bandalur Wholesalers and Retailers Welfare Association ,president ,Asarab ,Dinakaran ,
× RELATED பந்தலூர் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்