×

சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு பக்கத்து வீடுகளில் 31 சவரன் திருடிய இளம்பெண் சிக்கினார்

திருவொற்றியூர்: எண்ணூர், சிவன் படை வீதியை சேர்ந்தவர் கீர்த்தனா. இவரது வீட்டில், 7 சவரன் நகை திருடுபோனது தெரிந்தது. புகாரின்படி எண்ணூர் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தார். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சரவணன் மனைவி ஜான்சிராணி (34), நகைகளை திருடியது தெரியவந்தது. விசாரணையில், சம்பவத்தன்று ஜான்சிராணி, கீர்த்தனா வீட்டு மாடியில் வசிக்கும் அவரது சகோதரியை பார்க்க வருவது போல் வந்து கீர்த்தனா வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து நகையை திருடிக்கொண்டு மீண்டும் கதவை பூட்டி அதே இடத்தில் சாவியை வைத்தது தெரிந்தது. இதேபோல், வீட்டின் மாடியில் கடந்த ஆண்டு வசித்த பால்ராஜ் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சாவியை வைத்து செல்வதை நோட்டமிட்டு, சாவியை எடுத்து வீட்டில் இருந்த 28 சவரன் நகை திருடியதும் தெரிய வந்தது.

The post சாவி வைக்கும் இடத்தை நோட்டமிட்டு பக்கத்து வீடுகளில் 31 சவரன் திருடிய இளம்பெண் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Kierthana ,Shiva Force Street, Nilur ,
× RELATED தேசிய அளவில் மட்டுமல்ல வீட்டிலும் கூட்டணி அமைத்து தாய், மகள் போட்டி