×

ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் இந்திய மாணவர் மீது தாக்குதல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் 23 வயது இந்திய மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். சீக்கியர்களுக்கு தனி நாடு கோரிக்கையை வலியுறுத்தி வரும் காலிஸ்தான் அமைப்பினர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உள்ள இந்து கோயில்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் கோயில்களில் எழுதி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தங்கி படிக்கும் இந்தியாவை சேர்ந்த மாணவர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

தலைநகர் சிட்னியின் மேற்கு புறநகர் பகுதியான மெர்ரிலேண்டில் தங்கி படித்து வரும் 23 வயது இந்திய மாணவர், பகுதிநேர ஓட்டுநராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை காரில் அமர்ந்திருந்தபோது, அவரது காரை சூழ்ந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் காரை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷமிட்டவாறே மாணவரை வௌியே இழுத்து இரும்புக் கம்பிகளால் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். தகவல் அறிந்து வந்த நியூசவுத்வேல்ஸ் போலீசார் மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

The post ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் இந்திய மாணவர் மீது தாக்குதல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறை appeared first on Dinakaran.

Tags : Attack ,Sydney ,Khalistan ,Melbourne ,Australia ,Sikhs… ,Australian ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது