- விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிகள்
- Anse
- மார்க்யூட்டே
- லண்டன்
- செக்
- குடியரசு
- சந்தை
- விம்பிள்டன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டி
- ஆன்ஸ்
- சந்தை மோதல்
- தின மலர்
லண்டன்: விம்பிள்டன் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோண்ட்ருசோவா – துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் மோதுகின்றனர்.
நடப்பு விம்பிள்டன் தொடரில் பைனலுக்கு முன்னேறி அசத்தியுள்ள வோண்ட்ருசோவா (24 வயது, 42வது ரேங்க்), இதற்கு முன்பு 2வது சுற்றை தாண்டியதில்லை. ஸ்விடோலினா, பெகுலா, பவுஸ்கோவா, டோனா வேகிச், குதெர்மதோவா என முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி முதல் முறையாக பைனலில் நுழைந்துள்ள அவர் கோப்பையை முத்தமிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பரபரப்பான பைனலில் வோண்ட்ருசோவாவுடன் மோதவுள்ள ஆன்ஸ் ஜெபர் (28 வயது, 6வது ரேங்க்) 2022 விம்பிள்டனில் 2வது இடம் பிடித்தவர். தொடர்ந்து 2வது முறையாக இந்த ஆண்டும் பைனலில் விளையாட உள்ளார். காலிறுதியில் நடப்பு சாம்பியன் ரைபாகினாவையும், அரையிறுதியில் 2வது ரேங்க் வீராங்கனை சபலென்காவையும் வீழ்த்தியதால் ஆன்ஸ் மிகுந்த உற்சாகத்துடனும் தன்னம்பிக்கையுடனும் களமிறங்குகிறார். இரு வீராங்கனைகளும் சாம்பியனாக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
The post விம்பிள்டன் டென்னிஸ் இறுதி போட்டியில் இன்று: ஆன்ஸ்-மார்கெட்டா மோதல் appeared first on Dinakaran.