×

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் குடிநீர் கிண்ணம் கண்டெடுப்பு

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் 2வதுகட்ட அகழாய்வில், சுடுமண் குடிநீர் கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு 13 அடி ஆழத்தில் 14 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்து வருகின்றனர். இவைகளில், சுடு மண்ணாலான பானை, ஆண் உருவ பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி உள்ளிட்ட 2,750 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 14வது குழியில் நடந்த அகழாய்வில், கலைநயமிக்க சுடுமண்ணாலான தண்ணீர் குடிக்க பயன்படும் கிண்ணம் கிடைத்தது. இதன் மூலம் நமது முன்னோர்கள் கலைநயம் மிக்கவர்களாக வாழ்ந்துள்ளனர் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post விஜயகரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் குடிநீர் கிண்ணம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Sutumil Drinking Water Bowl ,Vijayagarisalkulam ,Virudhunagar ,2Vaduthagatta trench ,Vijayagarisalkullum ,Vembakkotta ,Virutunagar District, Vembakotta ,Visayakarisalkulam Trigger Drinking Bowl ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...