×

வேங்கை வயல் விவகாரம் சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை 3 பேரின் பெற்றோர் சம்மதம்: ஒருவர் எதிர்ப்பால் விசாரணை ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் 21 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 4 சிறுவர்களிடம் மரபணு பரிசோதனை செய்ய மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு செய்திருந்தனர். இதில் கடந்த 12ம் தேதி 4 சிறுவர்களின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜராயினர். விசாரணைக்குப்பின் பெற்றோருடன் சிறுவர்களும் 14 ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நேற்று மாலை 4.30 மணிக்கு சிறுவர்கள் மற்றும் பெற்றோர் கோர்ட்டில் ஆஜராயினர். அப்போது நீதிபதி ஜெயந்தி பெற்றோரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பதிவு செய்தார். இதில் 3 சிறுவர்களின் பெற்றோர் சோதனைக்கு சம்மதம் தெரிவித்த நிலையில், ஒரு சிறுவனின் வக்கீல், எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அரசு தரப்பு வக்கீல் குமார், இளம் சிறார் நீதிக் குழுமத்தின் ஒருங்கிணைப்புடன் பரிசோதனை நடத்தலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

The post வேங்கை வயல் விவகாரம் சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை 3 பேரின் பெற்றோர் சம்மதம்: ஒருவர் எதிர்ப்பால் விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Field ,Pudukkotta ,Pudukkottai District ,Vengaivayal ,Aditravidar ,Vengai ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...